பல்லடத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேசிய பொறுப்பாளர் புரந்தரேஸ்வரி பங்கேற்பு

Update: 2024-09-16 04:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக பாஜகவில் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஓட்டு சாவடிகளும் 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென மாநில தலைமை அறிவித்து அதற்கான பணியில் இறங்கியுள்ளது.உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் தேசிய பொறுப்பாளரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புரந்தரேஸ்வரி பல்லடம் வடக்கு மற்றும் பல்லடம் நகர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார் மாநில பொதுச் செயலாளர்கள் முருகானந்தம் மலர்கொடி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News