ஆரணியில் பாஜக எச்.ராஜாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஆரணி, செப் 17. ராகுல்காந்தியை இழிவாக பேசிய பாஜக எச்.ராஜாவை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆரணி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-17 13:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராகுல்காந்தியை இழிவாக பேசிய பாஜக எச்.ராஜாவை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆரணி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எஸ்.பிரசாத் தலைமை தாங்கினார். இதில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தியை தேசத்துரோகி என இழிவாக பேசிய பாரதிய ஜனதா கட்சியின் எச். ராஜாவை வன்மையாக கண்டித்து கோஷங்கள் எழுப்பியும், ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் இதில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தில்லை, ராமலிங்கம், சேகர், ஆசைத்தம்பி, ஏ பழனி சேத்துப்பட்டு சத்யன், மணவாளன், ராமச்சந்திரன், ராஜவேலு கிருஷ்ணா, தெள்ளூர் சேகர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் எஸ் வினோத்குமார், வட்டாரத் தலைவர்கள் பந்தாமணி, ஏ.கே இளங்கோவன், மருசூர் இளங்கோவன், சோலை முருகன், வெம்பாக்கம் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News