தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

விருத்தாசலம் போலீசார் நடவடிக்கை

Update: 2024-09-18 16:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த செல்வராஜ் (வயது 38) என்பவரின் கடலூர் மெயின் ரோட்டில் உள்ள பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News