குடும்ப பிரச்சினையில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை

விருத்தாச்சலம் போலீசார் விசாரணை

Update: 2024-09-18 16:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் புது குப்பம் உளுந்தூர்பேட்டை சாலையில் வசிப்பவர் தங்கராசு மகன் பிரகாஷ் (வயது 36). இவருக்கும் இவரது மனைவிக்கும் நேற்று முன்தினம் மாலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது இரவு 8 மணிக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் சாப்பாட்டை தள்ளிவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரது மனைவி ரம்யா மற்றும் அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது அப்பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று தேடிப் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு ரம்யா வந்த போது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அப்போது அவரது மனைவி பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரகாஷ் படுக்கை அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து அறிந்த விருத்தாசலம் போலீசார் அவரது பிரேதத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News