கோவிலில்பாறை ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு தங்ககவச அலங்காரம்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் மாவட்டம், பெரமாண்டம்பாளையம் கோவிலில்பாறை ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு புரட்டாசி மாத முதல் வார சனிக்கிழமை திருமஞ்சனம் தங்ககவச அலங்காரம் நடைபெற்றது.

Update: 2024-09-22 01:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பெரமாண்டம்பாளையம் கிராமம் கோவில்பாறையில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத முதல்வார சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் மஞ்சள் திருமஞ்சனம் , சீகக்காய் ,சந்தனம் சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டு பின்னர் துளசி மற்றும் வாசனை நறுமலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யத பின் மஹா தீபம் காண்பிக்கப்பட்டன இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்

Similar News