ஆடுகள் மேய்ந்தால் தகராறு : தீவைத்த வாலிபர் கைது!

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடுகள் மேய்ந்தால் ஏற்பட்ட தகராறில் தோட்டத்திற்கு தீவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-09-22 02:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம் புதூர் புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் திரவியம் மகன் பட்டாணி (65), இவர் மூலக்கரைப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அந்தத் தோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சப்போட்டா மரங்கள் வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில், ராமானுஜம் புதூரை சேர்ந்த முப்புடாதி மகன் மாரியப்பன் (30), என்பவர் வளர்த்து வரும் ஆடுள் தோட்டத்திற்குள் புகுந்து மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் காவலாளி பட்டாணிக்கும் மாரியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் மண்ணெண்ணெய் ஊற்றி சப்போட்டா மரங்களுக்கு திவைத்தாராம். இதில் மரங்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து பேரில் பட்டாணி கொடுத்த புகாரின் பேரில் சேரகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News