பனிமய மாதா ஆலயத்திற்கு ஓஎல்எஸ் டிரஸ்ட் நிதி ஒப்படைப்பு .

தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயத்திற்கு ஓஎல்எஸ் டிரஸ்ட் நிதியை, தொழிலதிபர் ஜோ வில்லவராயர் குடும்பத்தினர் ஒப்படைத்தனர்.

Update: 2024-09-22 03:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடியில் மறைந்த ஜோ வில்லவராயரின் மூத்த புதல்வர் ஜேசையா வில்லவராயர், பனிமய மாதா ஆலய அதிபர் ஸ்டார்வினை பங்கு அலுவலகத்தில் சந்தித்து தன் தந்தையார் பொறுப்பில் உள்ள ஓஎல்எஸ் டிரஸ்ட் ரூ.33,50000 வங்கி ஆணங்களை பங்கு பேரவை செயலர் எட்வின் பாண்டியன், முன்னாள் பங்கு பேரவை துணை தலைவர் ஹார்ட்லி, வின்சென்ட் டே பால் சபை தலைவர், ஜூட் ரன், பங்கு மூத்த உறுப்பினர் வால்டர் முன்நிலையில் பங்கு பேரவைக்கு வழங்கினார். பங்குதந்தை ஸ்டர்வின் அடிகளார் நன்றி சொல்லி ஜெபம் செய்து பண காசோலையை ஒப்பு கொண்டார். பங்கு பேரவை சார்பில் இந்த பெரும் தொகையை, மறைந்த ஜோ வில்லவராயர் பத்திரமாக பாதுகாத்து இன்று அவர் குடும்பம் அதை உரிய முறையில் ஒப்படைத்தமைக்கு பங்கு பேரவை செயலர் மற்றும் உறுப்பினர்கள் வில்லவராயர் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Similar News