தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

Update: 2024-09-22 03:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், தூய்மையே சேவை 2024 பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாகக் கொண்ட 22 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (21.09.2024) நடைபெற்றது. முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பேரிலோவன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி பெத்தனாட்சி பாலமுருகன் முன்னிலை வகித்தார். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள், மருத்துவர்கள் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆயுஷ் மருத்துவ அலுவலர் ஜாண் மோசஸ் முகாமில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஆயுர்வேதா கஷாயம் வழங்கினார் மேலும் ஆயுர்வேத சிகிச்சை முறையும் விளக்கினார்.

Similar News