தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு. காவல்துறை விசாரணை.
தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு. காவல்துறை விசாரணை.
தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு. காவல்துறை விசாரணை. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, நஞ்சை தோட்டக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரவி வயது 56. செப்டம்பர் 21ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில், தோட்டக்குறிச்சி காவிரி ஆற்று பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக, அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று ஆண் உடல் இருப்பதை உறுதி செய்த அவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத 35 லிருந்து 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு, அடையாளம் காண்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில், வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எவரேனும் கொலை செய்து வீசிவிட்டு சென்றனரா? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.