மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: கனிமொழி எம்பி

வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பணியாற்றுவேன் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

Update: 2024-09-24 16:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கருப்பூர், கடலையூர், சின்னமலைக்குன்று, எட்டயபுரம், கீழஈரால், எப்போதும்வென்றான், பசுவந்தனை ஆகிய இடங்களில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார் கனிமொழி எம்.பி. அப்போது அவர் பேசியது: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கடந்த முறையை விட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்துள்ளீர்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி. உங்களுடைய கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றும் வகையில் என் பணிகள் இருக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், மக்களின் உரிமைக்காகவும், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய திட்டங்களுக்காகவும் மத்திய பாஜக அரசுடன் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் என்றார். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலரும் அமைச்சருமான பெ.கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் கணேசன், திமுக ஒன்றிய செயலர்கள் மும்மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News