முருகன்குறிச்சியில் பிணமாக கிடந்த வாலிபர்

பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை

Update: 2024-09-25 02:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகர முருகன்குறிச்சி கால்வாய் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அதிலிருந்து சில மீட்டர் தொலைவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று இரவு பிணமாக கிடந்தார். அந்த வாலிபர் மூக்கு,முகம் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் உறைந்துள்ளது. வெற்றிவேல் என்று மார்பில் பச்சை குத்தியுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். வாலிபர் கொலையுண்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Similar News