ராகுல் காந்திக்கு மிரட்டல் நடவடிக்கை கோரி காங்கிரஸார் புகார்!

அரசியல் செய்திகள்

Update: 2024-09-25 05:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராகுல்காந்திக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸார் புகார் மனு அளித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்திக்கு மிரட்டல் விடுத்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சஞ்சய் கெய்க்வாட், தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் புதுக்கோட்டை துணைக் காவல்செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்ை துணைக் காவல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமானிடம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. முருகேசன் தலைமையில் காங்கிரஸார் புகார் அளித்தனர்.அப்போது, முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவ்யநாதன், வழக்குரைஞர் சந்திரசேகரன், மூத்த விவசாயிகள் சங்கத் தலைவர் ஜி.எ தனபதி, சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் இப்ராகிம்பாபு, வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News