தமிழக அரசு வேலைவாய்ப்புக்கு புதிய பயிற்சி மையம் தொடக்கம்!!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

Update: 2024-09-25 05:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், Entrepreneurship Development and Innovation Institute அகமதாபாத்துடன் இணைந்து “ தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்“ என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது. Entrepreneurship Development and Innovation Institute (EDII) அகமதாபாத் பாடத்திட்டத்தை தீர்மானிக்கும், பாடத்தின் ஒரு பகுதி அவர்களின் பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும். இதற்கான வகுப்புகள் வரும் அக்டோபர் 14, 2024 அன்று தொடங்கும். இதற்கான நேர்காணல்கள் செப்டம்பர் 2024 கடைசி வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. இப்பயிற்சியில் விண்ணப்பிக்க வயது 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் சேர்ந்து பயன்பெறலாம். இந்த பாடநெறி ஒரு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்முனைவோராக மாற முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். பயிற்சி முழுவதும் சென்னை Entrepreneurship Development and Innovation Institute -ல் உயர் தரத்துடன் கூடிய வகுப்பறையில் நடத்தப்படும். விருப்பமுள்ள நபர்கள்/ தொழில் முனைவோர் விண்ணப்பங்களை www.editn.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். மேலும் இப்பயிற்சிக்கான கட்டணமாக ரூ. 80, 000 என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்ததை இரண்டு தவணைகளாக பிரித்து மேற்கொள்ளும் பொழுது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணங்களை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. கோ. வாசுதேவன் அவர்களை தொடர்பு கொள்ள 9952371533, 8668101638 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விவரங்களையும் இந்த https://youtube.com/shorts/GBnEEtTQiuI?feature=share இணைய தளத்தில் காணலாம்.

Similar News