விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!

நிகழ்வுகள்

Update: 2024-09-25 05:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் மு. அருணா நேரில் அழைத்துப் பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பொன்னகரம் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. இளங்கோவன், புதுக்கோட்டை ராணியார் மகளிர் பள்ளி ஆசிரியர் இரா.ராஜநாராயணன், நச்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியார் பள்ளி ஆசிரியர் நா. ராக்கேஷ், கீரமங்கலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ந. வள்ளிநாயகி, அறந்தாங்கி சுனையக்காடு அரசுப் பள்ளி ஆசிரியர் சு. இரவி, புதுக்கோட்டை டிஇஎல்சி பள்ளி ஜோதி. தமிழாசிரியை சா. யுனைசி கிறிஸ்தவ ஜோதி புதுக்கோட்டை அசோக்நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் ம. பழனிசாமி, காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆங்கில ஆசிரியை இரா. வசந்தமலர், மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் ப. மகேஸ்வரன், அன்னவாசல் நிலையப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியை ப. கலைவாணி, புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் கிருபா ஜெயராஜ் ஆகியோர் மாநில நல்லாசிரியர் விருது பெற்றனர். இவர்களை நேரில் வரவழைத்து ஆட்சியர் மு. அருணா பாராட்டினார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் உள்ளிட்ட கல்வித்து அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News