தேசிய ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

கூட்டம்

Update: 2024-09-30 02:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சியில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் திரிலோகசந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் திருஞானகுகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் வினோத் வரவேற்றார். ஓய்வு பெற்ற சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் கோபி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் ஆசிரியர் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதியம், இடைநிலை ஆசிரியர் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள துப்புரவாளர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News