திருப்பூரில் சாம்சங் செல்போன்களை உடைத்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டம்!

திருப்பூரில் சாம்சங் செல்போன்களை உடைத்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-10-01 11:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கும் , ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கும் நிர்வாகம் முன் வரவில்லை என குற்றம் சாட்டி  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூரில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. சி ஐ டி யு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் குமரன் நினைவகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற சிஐடியு தொழிற்சங்கத்தினர் மத்திய தபால் நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் செல்போன்களை சாலையில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கோசங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜ் , சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் குமார் , சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சம்பத் , முத்துச்சாமி, சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் பாலன் , உன்னிகிருஷ்ணன் ,அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News