போலி மதுபானம் விற்பனை செய்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல் போலி மதுபானம் விற்பனை செய்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது

Update: 2024-10-01 11:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல், அங்குவிலாஸ் இறக்கம் அருகே மொபைல் கடையில் மிலிட்டரி மது என போலி ரசீது ஒட்டி விற்பனை செய்த திண்டுக்கல்,மக்கான் தெரு பகுதியை சேர்ந்த ஷேக்அப்துல்லா(36) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 136 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அவர்கள் ஷேக் அப்துல்லாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மதுவிலக்கு டிஎஸ்பி முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் காவலர்கள் ஷேக்அப்துல்லாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News