*மாவத்தூர் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்*

*மாவத்தூர் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்*

Update: 2024-10-02 11:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாவத்தூர் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் கரூர் மாவட்டம் - அக்டோபர் -2 கரூர் மாவட்டம், மாவத்தூர் கிராமம், பசுபதிபாளையத்தி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செ.கீதா செந்தில்மோகன் தலைமை வசித்தார். துணை தலைவர் பிரபாகுமார் முன்னிலை வசித்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராகபாலவிடுதி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஓவர்ஸ் முருகேசன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் CPIM பி.ராமமூர்த்தி, திமுக மாவட்ட பிரதிநிதி R.செந்தில் மோகன், செவிலியர், கிராம நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றபட்டது அதனை தொடர்ந்து சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி கேட்டு மனு கொடுத்தனர். தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கபட்டது. கிராம சபை கூட்டத்தில் உள்ளிட்ட 18 தீர்மானங்களை மாவத்தூர் ஊராட்சி செயலாளர் அன்பழகன் வாசித்தார்.

Similar News