கோட்டை மருதூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு

கோட்டை மருதூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு

Update: 2024-10-02 14:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோட்டை மருதூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டை மருதூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டை மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் வடிவு சிவசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் மலர்கொடி மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.இதில் கலந்துகொண்ட அமைச்சர் வரவு செலவு கணக்குகள் மற்றும் பஞ்சாயத்து தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது இதைத் தொடர்ந்து அறுபதுக்கு மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, கலைஞர் உதவித்தொகை, ஊனமுற்றோருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

Similar News