வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை*

உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன் தலைமையில் இளநிலை பொறியாளர் இந்திராபிரியதர்ஷினி, சாலை ஆய்வாளர் கார்த்திக்ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்

Update: 2024-10-04 01:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை இன்னும் ஒரிரு தினங்களில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை வருவாய்துறை என்று அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. அந்த வகையில் நெடுஞ்சாலைதுறை மதுரை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி,கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் அறிவுரையின் பேரில் மேலூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் மேலூர் கோட்ட உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன் தலைமையில் இளநிலை பொறியாளர் இந்திராபிரியதர்ஷினி, சாலை ஆய்வாளர் கார்த்திக்ராஜா, ஒப்பந்ததாரர் போர்யானை மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Similar News