பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு செயல்திட்ட விளக்க ஆயத்த கூட்டம்

கூட்டம்

Update: 2024-10-04 04:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான செயல்திட்ட ஆயத்த கூட்டம் சி.இ.ஓ., தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு சி,இ,ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். டி.இ.ஓ., ரேணுகோபால், உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் தண்டபாணி, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல, உண்டு உறைவிட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான கூட்டத்தில், மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை வரும் கல்வி ஆண்டில் உயர்த்த வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , இடிக்கப்பட்ட வேண்டிய கட்டடங்கள் ஆகியவற்றை காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன் செய்திடவேண்டும்.

Similar News