சிறுமியுடன் கட்டாய உறவு. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை புதைப்பு. கர்ப்பம் ஆக்கிய வரை கைது செய்து காவல்துறை வழக்கு பதிவு.

சிறுமியுடன் கட்டாய உறவு. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை புதைப்பு. கர்ப்பம் ஆக்கிய வரை கைது செய்து காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-10-04 05:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிறுமியுடன் கட்டாய உறவு. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை புதைப்பு. கர்ப்பம் ஆக்கிய வரை கைது செய்து காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே திருமணம் ஆகாத 17 வயதுடைய சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை பிறந்ததால் அமராவதி ஆற்றின் ஓரத்தில் புதைத்த சம்பவம்-17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வீராச்சாமி என்பவர் கைது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தாய், மற்றும் 17 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களது தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அரவக்குறிச்சி, அரங்கபாளையம் பகுதியை சேர்ந்த வீராச்சாமி (54) என்பவர் திருமணம் ஆகி முதல் மனைவியை விவாகரத்து பெற்று இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். விவசாய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த பொழுது 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்பு தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும், இரண்டு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என வீராச்சாமி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் 17 வயதுடைய சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை வீட்டில் யாருக்கும் சொல்லாத நிலையில் 7 மாதம் கர்ப்பமாக இருந்ததால், வயிற்று வலியால் துடித்ததாகவும்,இதனால், கருக்கலைந்து குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததாகவும், திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் அச்சமடைந்து அதனை மறைக்கும் நோக்கத்தில் பெண்ணின் தாயார் தனது வீட்டில் பிறந்த குழந்தையை கட்டைப்பையில் எடுத்துச் சென்று வீட்டிற்கு அருகில் உள்ள அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார். பின்னர் வயிற்று வலியால் துடித்த 17 வயதுடைய மகளை அழைத்துக் கொண்டு சின்னதாராபுரம் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் இல்லாததால், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 01.10.24 ஆம் தேதி அன்று உள் நோயாளியாக சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்போது மருத்துவர் கிருபையை பரிசோதனை செய்த போது, அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், இது குறித்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சின்ன தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் அழகுராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, அமராவதி ஆற்றின் கரையில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 17 வயதுடைய சிறுமையை கட்டாயப்படுத்தி கற்பமாக்கிய அரவக்குறிச்சி ரங்கபாளையத்தைச் சேர்ந்த வீராச்சாமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 17 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பம் ஆக்கிய விவகாரம் தெரிய வந்தது.

Similar News