அய்யர்மலை 4 ஆவது சோமவார விழாவில் 16 ஆம் ஆண்டு உலக அமைதி வேண்டி 1017 படிகள் உருண்டு ஏறி தாத்தா வேண்டுதலை நிறைவேற்றிய சிவ பக்தர்

27 ஆண்டுகளாக தாத்தா செய்து வந்த வேண்டுதலை நிறைவேற்றிய பேரன்;

Update: 2025-12-08 08:39 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த 4 ஆவது சோமவார விழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பக்தர்கள், குடிப்பாட்டுக்காரர்கள் தேங்காய், பழம் வைத்து சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த 4 ஆவது சோமவார விழாவில் குளித்தலை அருகே நங்கவரம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர் 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். இவரது தாத்தா நாகராஜன் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக உலக அமைதிக்காகவும், மக்கள் பசி பட்டினி இன்றி நல்வாழ்வு வாழ்ந்திடவும் 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வந்தார். அவரது மறைவிற்குப் பின் தனது தாத்தாவின் வேண்டுதலை தொடர்ந்து 16 ஆவது முறையாக அய்யர்மலை 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். அவருடன் உறவினர்கள் முருகன் துதி பாடல்களை பாடி அரோகரா கோசத்துடன் அவரைப் பின் தொடர்ந்து படிகள் ஏறி சென்றனர்.

Similar News