நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

எதிர்ப்பு

Update: 2024-10-05 03:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சியுடன், கீரனுார் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருக்கோவிலுார் நகராட்சியுடன், கீரனுார், தேவியகரம் ஊராட்சிகளை இணைத்து, சமீபத்தில் அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் கிராம மக்கள் நேற்று காலை 10:30 மணியளவில் கீரனுாரில் ஆசனுார் - திருவண்ணாமலை புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்ற டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, 11:00 மணியளவில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Similar News