சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை

திண்டுக்கல்லில் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை

Update: 2024-10-06 11:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டத்தில் whatsapp ஸ்டேட்டஸ், story, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறாக பதிவிடும் நபர்களை போலீசார் கண்காணித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Similar News