ஒட்டன்சத்திரத்தில் ஆா்.எஸ்.எஸ் அணிவகுப்பு

ஒட்டன்சத்திரத்தில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலம், பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-10-07 02:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சோதனைச் சாவடி அருகே தொடங்கிய இந்த அணிவகுப்பு ஊா்வலத்தை திண்டுக்கல் தொழில் அதிபரும், விவசாயியுமான செல்லமுத்து தொடங்கிவைத்தாா். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், பழனி சாலை, தாராபுரம் சாலை வழியாக மின்வாரிய அலுவலகம் வரை சென்று திரும்பிய அணிவகுப்பு ஊா்வலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் நிறைவடைந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலம் நடைபெற்றது. இதையடுத்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். ஞானசேகரன் முன்னிலை வகித்தாா். தென் மாநில அமைப்பாளா் ஆறுமுகம் பேசினாா். கோட்டத் தலைவா் சுப்பிரமணி, மாவட்ட தலைவா் குப்புச்சாமி உள்பட திரளான நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

Similar News