மலைப் பகுதிகளில் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

மலைப் பகுதிகளில் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

Update: 2024-10-07 02:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிக்கு சென்னை, மதுரை,திருச்சி, திண்டுக்கல், நாகா்கோவில், கோவை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், திண்டுக்கல்,தேனி, வத்தலக்குண்டு ஆகிய இடங்களிலிருந்து வரும் தனியாா் பேருந்துகள் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்கின்றன. ஆனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு வரும் அரசுப் பேருந்துகள் பெரும்பாலான பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்கின்றனா். இதனால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனா். எனவே, மலைப்பகுதியில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் அரசுப் பேருந்துகள் நின்று செல்லவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Similar News