காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு

விழிப்புணர்வு

Update: 2024-10-07 04:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வடபொன்பரப்பி காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே சமூக நல்லுறவை மேம்படுத்தும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.ரங்கப்பனுார் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை பொதுமக்கள் இடையே சமூக நல்லுறவை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். போதைப்பொருள், உள்ளூர் பிரச்னைகள், சாலை பாதுகாப்பு, பொருளாதார குற்றங்கள், பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News