நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு வேளையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராசிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், ராசிபுரம் நகர், பட்டணம், வடுகம், புதுப்பட்டி, அணைப்பாளையம், ஆண்டகளுக்கேட், வெண்ணந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.