மூலகாட்டனூரில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம்.

மூலகாட்டனூரில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம்.

Update: 2024-10-07 15:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மூலகாட்டனூரில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம். கரூர் மாவட்டம், புலியூர், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் மகன் லிஜித் வயது 20. இவர் அக்டோபர் 5-ம் தேதி இரவு 7:15 மணியளவில், கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் மூலகாட்டனூர் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர், வெள்ளாளப்பட்டி அருகே மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் வினோத் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் லிஜித் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லிஜித்துக்கு தலை,முகம், வலது கால், வலது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த லிஜித்தின் தந்தை பிரசாத் இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், கவன குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வினோத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News