மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாள் பாத யாத்திரை

ஆரணி அக் .08 செய்யாறில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாள் பாத யாத்திரை

Update: 2024-10-07 15:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் வழிகாட்டுதலின்படி செய்யாறில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின்155 வது பிறந்தநாளை முன்னிட்டு பாத யாத்திரை நிகழ்ச்சி செய்யாறு பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆரணி கூட்ரோடு வரையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு நகர காங்கிரஸ் கட்சி தலைவர் வீ.சந்துரு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் எஸ் பிரசாத் மற்றும் மாவட்டத்தின் பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலையரசன் செய்யாறு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வெங்கடேசன், வட்டாரத் தலைவர்கள் சிங்காரவேல். பீமன், அமரேசன், கிருஷ்ணமூர்த்தி, பழனி, பெருமாள், இளைஞர் காங்கிரஸ் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் லட்சுமணன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரேம், மோகன்ராஜ், பாலாஜி, சதீஷ்குமார், சரவணன், லோகேஷ், காங்கிரஸ் நிர்வாகிகள் முனியாண்டி, பாபு, சுப்பிரமணி, அன்பு, சுரேஷ் பாபு, விஜயகுமார், ஏகாம்பரம், செல்வம், மனோஜ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News