எஸ்டி கொரியர் அலுவலகம் அருகில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.

எஸ்டி கொரியர் அலுவலகம் அருகில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.

Update: 2024-10-07 16:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
எஸ்டி கொரியர் அலுவலகம் அருகில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 65. இவர் அக்டோபர் 5-ம் தேதி மாலை 5 மணி அளவில், கரூர் - சேலம் செல்லும் சாலையில் உள்ள எஸ்டி கொரியர் அலுவலக சர்வீஸ் ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில், எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூரை சேர்ந்த குபேந்திரன் வயது 28 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற பழனிசாமி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமி அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குபேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News