சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குமாரபாளையம் நகரில் விசைத்தறி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-10-07 16:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குமாரபாளையம் நகரில் விசைத்தறி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சரவணன் தலைமையில் நடந்தது. போராட்டம் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் நகர செயலாளர் பாலுசாமி, உதவி செயலாளர் மோகன், உதவி தலைவர் சக்திவேல், பொருளாளர் வெங்கடேசன் உள்பட பலர் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட செயலாளர் அசோகன் உள்பட விசைத்தறி தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Similar News