தேரப்பாடி- அடுத்தடுத்து கார்கள் டூவீலர் மீது மோதி விபத்து.ஒருவர் உயிரிழப்பு.

தேரப்பாடி- அடுத்தடுத்து கார்கள் டூவீலர் மீது மோதி விபத்து.ஒருவர் உயிரிழப்பு.

Update: 2024-10-09 11:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேரப்பாடி- அடுத்தடுத்து கார்கள் டூவீலர் மீது மோதி விபத்து.ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நாகம்பள்ளி அருகே உள்ள ஓந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் வயது 40. இவரது மனைவி சுமதி வயது 37. இவர்கள் இருவரும் அக்டோபர் 7-ம் தேதி இரவு 7:30- மணி அளவில், திண்டுக்கல்-கரூர் சாலையில், அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் அப்பகுதியில் உள்ள தேரப்பாடி பிரிவு ஆர்ச் அருகே சென்ற போது, அதே திசையில் தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் வயது 31 என்பவர் ஓட்டி வந்த கார், இவருக்கு முன்னால் சென்ற கரூர்,காக்காவாடி, மேல பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டிச் சென்ற இனோவா கார் மீது மோதியது. இதனால், இனோவா கார் ஈஸ்வரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஈஸ்வரனுக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார். இவரது மனைவி சுமதிக்கு இடுப்பு மற்றும் இடது விலா எழும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த ஈஸ்வரனின் மூத்த சகோதரர் மாரிமுத்து வயது 45 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஈஸ்வரனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விபத்து ஏற்படும் வகையில் காரை ஓட்டிய கணேஷ் மற்றும் முருகேசன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Similar News