மாயனூர் இரட்டை வாய்க்கால் அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. ஆறு பேர் படுகாயம்.

மாயனூர் இரட்டை வாய்க்கால் அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. ஆறு பேர் படுகாயம்.

Update: 2024-10-09 13:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாயனூர் இரட்டை வாய்க்கால் அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. ஆறு பேர் படுகாயம். நீலகிரி மாவட்டம், டான்சான்டல், கக்கஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் வயது 31 இவரது மனைவி சங்கீதா வயது 27, மகன் சியோன் ஸமித் வயது 5, இவர்களது உறவினர்கள் ஊட்டி பாம்பே காஸ்டிலை சேர்ந்த பாலன் வயது 54, இவரது மனைவி கவிதா வயது 45, இவர்களது மகள் வினிதா வயது 24. இவர்கள் அனைவரும் ஒரே காரில் அக்டோபர் ஏழாம் தேதி அதிகாலை 5 மணி அளவில் கரூர் திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவளது கார் கரூர் மாவட்டம் மாயனூர் இரட்டை வாய்க்கால் அருகே சென்ற போது எதிர் திசையில் திருச்சியைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் சதீஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத நேரத்தில் ஸ்டாலின் ஓட்டிச் சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டிய ஸ்டாலின், காரில் பயணித்த மற்ற ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர் இவர்கள் அனைவரையும் மீட்டு கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், லாரியை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Similar News