முள் புதர்கள் நிறைந்த சுடுகாட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2024-10-10 07:49 GMT

முள் புதர்கள் நிறைந்த சுடுகாட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆர்.கே.பேட்டையில் முள் புதர்கள் நிறைந்த சுடுகாட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.




திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்காக இரண்டு சுடுகாடுகள் உள்ளது.

இதில் ஊர் மற்றும் காலணி பகுதியில் வசிப்பவர்கள் உயிர் இழந்தாள் புதைக்கவோ அல்லது எரிக்கவோ உள்ள சுடுகாடு பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் ஊர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுடுகாடு அதிக அளவில் முள் புதர்களால் சூழப்பட்டு உடலை அடக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த சுடுகாட்டு சீர் அமைக்க ஊர் மக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆர்.கே.பேட்டை கிராம மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்றிய நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News