பொன்னப்பநாடார் நினைவு தினம்  எம்.எல்.ஏ.   மரியாதை

கருங்கலில்

Update: 2024-10-12 15:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு  எதிர்கட்சி முன்னாள் தலைவர் குமரி கோமேதகம்  பொன்னப்ப நாடார் அவர்களின் 48 - நினைவு தினத்தை முன்னிட்டு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் ஜங்சனில் வைத்து நடைபெற்ற் நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  பினுலால் சிங் முன்னிலை வகித்தார்.              தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பொன்னப்ப நாடார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாலவிளையில் உள்ள அவரது  நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.           நிகழ்ச்சியில்  மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், மாவட்ட நிர்வாகிகள் ஆசீர் பிரைட் சிங், சுனில்குமார், ஜஸ்டஸ் அமிர்தயைன், ஊராட்சி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள்  மற்றும் மற்றும் துணை அமைப்புகளின் தலைவர்கள்,  நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் உஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News