சங்கரநாராயண சாமி திருக்கோவிலில் மீண்டும் மழை நீரில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

திருக்கோவிலில் மீண்டும் மழை நீரில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

Update: 2024-10-23 06:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இம்மழை நீர் சங்கரநாராயண சாமி திருக்கோவிலில் உள்ளே புகுந்தது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தேங்கிய மழை நீரில் நின்று சாமி தரிசனம் செய்தனர், மேலும் குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர் சிறு குழந்தைகள் தேங்கிய மழை நீரில் ஜாலியாக விளையாண்டனர். பின்னர் மின் மோட்டார் மூலம் மழை நீரினை வெளியேற்றும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது தேங்கிய மழை நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Similar News