புன்னம்சத்திரம் அருகே டூவீலர் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
புன்னம்சத்திரம் அருகே டூவீலர் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.;
புன்னம்சத்திரம் அருகே டூவீலர் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா புன்னம்சத்திரம் அருகே உள்ள வெள்ளியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் வயது 63. இவர் அக்டோபர் 25ஆம் தேதி மதியம் 3:15 மணியளவில், புன்னம்சத்திரத்தில் இருந்து பஞ்சபிச்சை குட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள சுப்பிரமணி என்பவர் வீட்டின் அருகே சென்றபோது, எதிர் திசையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை, கரும்புலிபட்டி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் கனகராஜ் வயது 26 என்பவர்,எதிர் திசையில் வேகமாக ஓட்டி வந்த லாரி, சுப்பிரமணியம் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.. . இந்த விபத்தில் வலது முழங்கை மற்றும் வலது கால் முட்டியில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியத்தை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியம் மகன் சதாசிவம் வயது 37 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.