கடலூரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு நிவாரணம்

அமமுக மாவட்ட செயலாளர் வழங்கினார்;

Update: 2024-12-13 16:17 GMT
கடலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் கடலூர் திருவந்திபுரம் விலங்கல் பட்டு கோவில்களில் அபிஷேக ஆராதனைகள் செய்தனர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் மேலும் முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது இதைத் தொடர்ந்து மஞ்சக்குப்பம் மணி கூண்டு அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் குடும்பத்திற்கு தார்ப்பாய் மற்றும் உணவுப் பொருள் வழங்கப்பட்டது எம்பி அகரம் கிராமத்தில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் கல்வி உபகரணங்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாநில பேரவை துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வழக்கறிஞர் சத்யராஜ் சிவக்குமார் மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி இணைச்செயலாளர் உமா துணை செயலாளர்கள் வேல்முருகன் சிவகாமி கல்யாணராமன் மற்றும் பகுதி செயலாளர்கள் காதர் தீபா சிவசங்கர் சம்பத் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் அன்வர் பாஷா ராஜேந்திரன் சக்திவேல் சேதுராமன் பிரவீன் குமார் ராஜ்குமார் சார்பு அணி செயலாளர்கள் கணேசன் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

Similar News