அரியலூர் அருகே மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு தாக்கி வந்த கணவனை கொலை செய்த மனைவி.
அரியலூர் அருகே மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு தாக்கி வந்த கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்;
அரியலூர், டிச.17- அரியலூர் அருகே மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு தாக்கி வந்த கணவனை கொலை செய்த மனைவியை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அரியலூர் மாவட்டம் பெரிய ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா (45) இவரது மனைவி பழனியம்மாள் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மகனுக்கு திருமணமாகாத நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் சின்னப்பா கடந்த பல ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் திங்கள் கிழமை இரவும் மனைவி மற்றும் மகளை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி பழனியம்மாள் கத்தியால் தலையில் தாக்கியும், இரண்டு கால் மற்றும் கை நரம்பை துண்டித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து இரும்புலிகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியம்மாளை கைது விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்