மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
கடலூர் கலெக்டர் பரிசு வழங்கினார்;
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (19.12.2024) பரிசு மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், உடன் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்ட திட்ட மேலாளர் எழில்ராணி உட்பட பலர் உள்ளனர்.