ஊராட்சியை பேரூராட்சி உடன் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு மனு
ஊராட்சியை பேரூராட்சி உடன் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு மனு;
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை பேரூராட்சி உடன் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் தேவாங்க தெரு, ரெட்டியார் தெரு, கரும்புக்குப்பம் காலனி, வியட்நாம் காலனி, பால யோகி நகர், பாலகிருஷ்ணாபுரம், ராமஞ்சேரி கண்டிகை, புதுப்பேட்டை, அருந்ததியர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி சார்பாக அனைத்து வார்டு உறுப்பினர்களுடன் குடிநீர், மின்விளக்கு, சாலை அமைத்தல், 100 நாள் வேலை தருதல், அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் மற்றும் கலைஞர் கனவு இல்லம் ஆகிய பல்வேறு திட்டங்களை ஊராட்சி சார்பாக நிறைவேற்றி தரப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒட்டி உள்ள கும்மிடிப்பூண்டி பேரூராட்சி உடன் இணைப்பதற்காக அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அது மட்டுமல்ல கும்மிடிப்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கு போதிய மக்கள் தொகை இல்லாத காரணத்தினால் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சுற்றியுள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி, பெத்திகுப்பம், தேர்வழி, ஆத்துப்பாக்கம், வேற்காடு, சித்தராஜ் கண்டிகை கிராமம் ஊராட்சிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இதனை அறிந்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாரன், துணை தலைவர் எல்லப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், 100 நாள் பணியாற்றம் பொதுமக்கள் ஆகியோர் நேற்று ஜிஎன்டி சாலையிலிருந்து பேரணியாக கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தமன்னனிடம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்