விருத்தாசலம் அருகே ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர்

ரயில்வே போலீசார் விசாரணை;

Update: 2025-01-20 14:20 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூவனூர் ரயில் நிலையத்திற்கும் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள பெரியவடவாடி பேருந்து நிறுத்தம் அருகே ரயில் தண்டவாளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சென்னை மார்க்கமாக செல்வம் ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் ரயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு ப பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சாமியார் போல் தோற்றத்தில் உள்ள அந்த முதியவர் காவி கலரில் வேட்டி அணிந்திருந்தார். கழுத்தில் ஒரு பை அணிந்திருந்தார். தொடர்ந்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News