வாணியம்பாடி நகர காவல் நிலையத்தை நகை கடை உரிமையாளர்கள் முற்றுகை
வாணியம்பாடி நகர காவல் நிலையத்தை நகை கடை உரிமையாளர்கள் முற்றுகை;
திருப்பத்தூரில் மாவட்டம் வாணியம்பாடியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகைகளை விற்பனைக்கு வாங்கியதாக கடை உரிமையாளரை கர்நாடகா காவல்துறையினர் கைது செய்து சென்றதால் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுப்பட்ட நகை கடை உரிமையாளர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தாபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழகத்திலிருந்து சென்று தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சதாம் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கர்நாடகா காவல்துறையினர் கைது, அவர்களிடம் விசாரணை மேற்க்கொண்ட போது அவர்கள் 13 தங்க செயின்களை கர்நாடகாவில் இருந்து கொள்ளையடித்து கொண்டு வந்து வாணியம்பாடியில் உள்ள நகை கடைகளில் விற்பனை செய்ததாக கர்நாடகா காவல்துறையினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, கர்நாடகா காவல்துறையினர் வாணியம்பாடியிற்கு வந்து கொள்ளையர்கள் கூறிய நகைக்கடையிற்கு சென்று, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்பனைக்கு வாங்கியதாக நகைகடை உரிமையாளர் பாபு என்பவரை கர்நாடகா காவல்துறையினர் கைது செய்து கர்நாடகாவிற்கு அழைத்துச் சென்றதால், ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்து நகை கடை உரிமையாளரை கைது செய்ததாக வாணியம்பாடியில் உள்ள வணிகர் சங்கத்தினர் மற்றும் நகை கடை உரிமையாளர்கள் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.. அதனை தொடர்ந்து கர்நாடகா காவல்துறையினருடன், வாணியம்பாடி துணைகாவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் மூலம் வணிகர் சங்கத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, நகைகடை உரிமையாளர் பாபுவிடம் உரிய விசாரணை மேற்க்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக கர்நாடகா காவல்துறையினர் உறுதியளித்தின் பேரில் போராட்டத்தை கைவிட்டு வணிகர்கள் சங்கத்தினர் மற்றும் நகைகடை உரிமையார்கள் கலைந்து சென்றனர்.. மேலும் கைது செய்யப்பட்ட பிரசாந்த் மற்றும் முகமது சதாம் ஆகியோர் மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழிப்பறி தொடர்பான குற்றச்சம்பவங்கள் இருப்பது காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..