வால்பாறை: ஜெர்மன் சுற்றுலா பயணி யானை தாக்கி உயிரிழப்பு !

வால்பாறைக்கு சுற்றுலா வந்த ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் (77) என்பவர் யானை நிற்பது தெரிந்தும், யானையை கடந்து செல்வதற்காக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றார். கோபமடைந்த யானை, அவரைத் தூக்கி அருகிலிருந்த புதரில் இரு சக்கர வாகனத்தோடு வீசியது.;

Update: 2025-02-05 06:30 GMT
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது வாட்டர் பால்ஸ் டைகர் வேலி. இங்கு நேற்று மாலை யானைகள் முகாமிட்டிருந்தன. இதை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் தங்களது வாகனத்தை தொலைவில் நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். அப்போது வால்பாறைக்கு சுற்றுலா வந்த ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் (77) என்பவர் யானை நிற்பது தெரிந்தும், யானையை கடந்து செல்வதற்காக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றார். கோபமடைந்த யானை, அவரைத் தூக்கி அருகிலிருந்த புதரில் இரு சக்கர வாகனத்தோடு வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்ட பொதுமக்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வால்பாறை வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யானை அருகே செல்வதும், அந்த யானை அவரை தாக்குவதையும் ஒருவர் வீடியோ எடுத்திருந்தார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Similar News