வேலூர்: சி.ஆர்.பி.எப் வீரர் தூக்கிட்டு தற்கொலை!

பள்ளிகொண்டா அருகே சி.ஆர்.பி.எப் வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-02-06 07:16 GMT
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியை சேர்ந்தவர் கோபி (40) இவர் சட்டிஸ்கரில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி வந்தார். பொங்கல் பண்டிகை, விடுமுறையில் வந்தவர், திருமணம் ஆகாத மனவிரக்தியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் , விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News