அலங்கியம் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில் முதலை நடமாட்டம் ஆற்றுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என வேண்டுகோள்

அலங்கியம் அருகே அமராவதி ஆற்றுப் பாலத்தில் முதலை நடமாட்டம் இருப்பதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.;

Update: 2025-02-07 10:34 GMT
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடும் போது முதலைகள் உலா வருகிறது. அவ்வப்போது சீதக்காடு, தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில், வீராச்சிமங்கலம், தாளக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் இருந்து வந்தது. தாராபுரம் ஈஸ்வரன் கோவில் பகுதி அமராவதி ஆற்றில் முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் முதலையை பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாதம் அலங்கியம் ஆற்றுப்பாலம் அருகே முதலை நடமாட்டம் இருப்பதை சில இளைஞர்கள் பார்த்தனர். இந்த நிலையில் நேற்று தாராபுரம்-அலங்கியம் செல்லும் ரோட்டில் அமராவதி ஆற்று பாலத்தில் முதலை ஒன்று உலா வந்து கொண்டு இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனவே இந்த முதலையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அலங்கியம் அமராவதி ஆற்றுப்பாலம் பகுதியில் கீழே இறங்கி குளிக்கவும், துணிதுவைக்கவும் வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் கூறியுள்ளனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அதேபோல் பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்காக தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தாராபுரம் வழியாக பழனிக்கு சென்று அப்போது அங்கு உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்து வருவதால் அமராவதி ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். அமராவதி ஆற் றுப் பாலத்தின் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Similar News