ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமத்தில்மக்கள் தொடர்பு முகாம்,
ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.;
அரியலூர், பிப்.12- ஜெயங்கொண்டம் ஒன்றியம், பெரியவளையத்தில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்,மாபெரும் மக்கள் தொடர்பு முகாம்,உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ரா.ஷீஜா அவர்கள் வரவேற்புரையில்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றதில்,மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பொ.இரத்தினசாமி அவர்கள் பல்வேறு துறைகளில் 56 பயணாளிகளுக்கு,ரூபாய் 54.94 இலட்சம் மதிப்பீட்டில்,பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முனைவர் பொ.ரா.சிவராமன்,உதவி திட்ட இயக்குநர் (ஊராட்சிகள் தனிக்கை) பழனிச்சாமி, வட்டாட்சியர் சம்பத் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பயணாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.