கே.என்.பேட்டை: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கே.என்.பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2025-02-16 05:27 GMT
மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கடலூர் ஊராட்சி ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சி, கே.என்.பேட்டை, பவானி மெட்ரிகுலேஷன் பள்ளியில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து பார்வையிட்டு தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், மாநகராட்சி சுந்தரி ராஜா, துணை மேயர் ப.தாமரைச்செல்வன், மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Similar News